மதுரை | பிரபல தொழிலதிபர் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள 6 பேர் கைது !
மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை மதுரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர். மதுரையில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் சுந்தர்.இவர் கடந்த 14 ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தொழிலதிபரை தேடி வருகின்றனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை […]
கவனம் பெற்று வரும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை !
தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உறுப்பினர் சேர்க்கை இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்கள் யாவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவங்கிய ஒரு […]
கோவையில் சித்திரை திருநாளை முன்னிட்டு ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு !
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான ஜோதிடரும், வாஸ்து நிபுணருமான ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தின் நிறுவனர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை அமைந்துள்ள, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அருகில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு, தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப்பற்றி தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான […]
தமிழகத்தில் 3 தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் […]
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் – மகிழ்ச்சியில் ரசிகர்கள் !
விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கேப்டன் விஜகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக 4கே தரம் உயர்த்தப்பட்டு விரைவில் இப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. மேலும்,கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலமாக விஜகாந்த் கேப்டன் விஜகாந்த் என்று மக்களால்செல்லமாக அழைக்கப்பட்டார். பிலிம் […]
உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் !
உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இந்த நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் காரணமாக, விரிவாக்கம் செய்து உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 60% தொழிலாளர்கள் […]
அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் -பிரேமலதா விஜயகாந்த்!
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, […]
நெல்லையில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனால் பரபரப்பு !
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். இதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக […]
4 கோடி ரூபாய் சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் !
பாஜக அரசு அளித்த 4 கோடி ரூபாய் பரிசை ஏற்றதற்காக, விளையாடு வீரங்கனை வினேஷ் போகத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு வினேஷ் போகத் பதிலளித்துள்ளார். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது. இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் […]
தமிழ்நாடு | நேற்று நள்ளிரவில் இருந்து மீன் பிடி தடைக்கலாம் அமல் !
தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் […]