தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் […]
IPL 2025 | புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி வெளியேற்றம் !
மழை காரணமாக, பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறீயது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஒரு வாரம் கழித்து, நேற்று போட்டிகள் மீண்டும் தொடங்க இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ந்து மழை […]
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் நாளைக்கு ஏவப்பட்ட உள்ளது -இஸ்ரோ தலைவர் நாராயணன்!
நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், பூமியில் உள்ள சிறிய பொருளையும் துல்லியமாக காட்டும் தன்மை கொண்டது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது 101வது ராக்கெட்டான PSLV-C61-ஐ நாளை, ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. காலை 5:59 மணிக்கு ஏவப்பட உள்ள இந்த ஆர்ஐஎஸ்ஏடி-1பி என்ற செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருட்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. இதனிடையே, திருப்பதியில் […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்!
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை […]
புதுக்கோட்டை | சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம் !
புதுக்கோட்டை அருகே, முத்துமுனீஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்து முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு […]
இத்தாலி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீரர் அல்காரஸ்!
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியும் மோதினர். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் […]
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை தஞ்சை, திருவாரூர், […]
பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் – அமைச்சர் ஜெய்சங்கர்!
பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இருக்கும் என பிரதமர் மோடி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை மூட […]
மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் பலி !
மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே சிமெண்ட் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியானது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதாம எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இதனையடுத்து மற்றொரு வேன் மீதும் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதல்களுக்குப் பிறகு […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.80 – அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 71,239 மாணவர்களில் 8 லட்சத்து 17,261 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் […]