சூடானில் வேகமாகப் பரவி வரும் காலரா -172 பேர் உயிரிழப்பு !

சூடானில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயால் கடந்த ஒருவாரத்தில் 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காலரா நோய் சூடான் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய காலரா தொற்று காரணமாக க்டந்த ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின.

இதேபோல் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts