உலக பாரம்பரிய தினம் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி !

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
உலகில் உள்ள பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் அதிக மக்கள் இந்த தினத்தில் அவற்றை பார்வையிடுவார்கள் என்றும் இதன்மூலம் நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலவசமாகப் பார்க்கவும் தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது.