மூணாறில் வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கி சென்ற சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி !

மூணாறில் வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கி சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வளர்ப்பு நாய் காணாமல் போயுள்ளது. அதனைதொடர்ந்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் நேற்று அதிகாலை, சிறுத்தை ஒன்று, வீட்டுக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த நாயை கடித்து தூக்கிச் செல்லும் அதிர்ச்சிக் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனால் பதற்றமடைந்துள்ள அப்பகுதி மக்கள், கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் சிறுத்தை உள்ளிட வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts