வக்ஃப் திருத்த சட்டத்தால் வன்முறை களமாக மாறிய மேற்குவங்கம் !

மேற்குவங்கத்தில் வக்ஃப்திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதையடுத்து, இத இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மேற்குவங்க மாநிலம், ஜான்கிபூரில் ஏராளமானோர் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. அப்பொய்ஜி போராட்டக்காரர்கள்,ஒரு கட்டத்தில் காவல் துறையின் வாகனத்தை கவிழ்த்து தீ வைத்துள்ளனர்.

இதனால், அப்பகுதியில் வன்முறை கொழுந்துவிட்டு எறிய தொடங்கியது.இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான காவல் துறையினர்கள் குவிக்கப்பட்டனர்.இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts