கவிப்பேரரசு வைரமுத்து தாயார் உடல்நலக் குறைவால் காலமானார் !

கவிப்பேரரசு வைரமுத்து தனது தாயாரின் உடலைக கண்டு கண் கலங்கியதோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பூர்வீக வீட்டில் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் வசித்து வந்தார்.

இந்நிலையில் 92 வயதான அங்கம்மாள் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று இயற்கை எய்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கவிப்பேரரசு வைரமுத்து தனது தாயாரின் உடலைக கண்டு கண் கலங்கியதோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் மலேசிய நாட்டின் முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரவணன் நேரில் வந்து வைரமுத்துவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனையடுத்து பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அங்கம்மாள் உடளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts