நாளை கூடுகிறது ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் !

சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாளை, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.

இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

எனவே, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்குவார் என்றும் கூறப்படுகிறது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts