தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு…இன்று முதல் அமல்!

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கaச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு ஏற்றப்படி குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வானகரம், பரனூர், ஆத்தூர், நெல்லூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட 40சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts