மாநகராட்சி, நகராட்சிகளில் ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவு !

மாநகராட்சி, நகராட்சிகளில் 1,132 இடங்களில் உள்ள காலனி உள்ளிட்ட ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கெல்லாம் முன்னதாக சாலைகளின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டுப் பெயர்களை நீக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சி , நகராட்சிகளில் உள்ள 1,132 இடங்களில் காலனி, ஜாதிப் பெயரை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய பெயர்கள் தொடர்பான கருத்துருவை தயார் நிலையில் வைக்க நகராட்சி நிர்வாக ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது. பூக்கள், மரங்கள், தலைவர்கள், வரலாறு, நிலம் மற்றும் இயற்கை அடிப்படையில் பெயர் வைக்கவும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts