ஸ்பேஸ் டாக்கிங் இணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்துமுடித்தது ‘இஸ்ரோ’ !

ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை, ‘இஸ்ரோ’ வெற்றிகரமாக இணைத்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, ‘ஸ்பேடெக்ஸ்’ என்ற திட்டத்தில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., சி — 60 ராக்கெட் வாயிலாக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் […]