ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் மாயம் !

ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 46 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை, ஏஎன்-24 பயணிகள் விமானம் இழந்துவிட்டதாகவும், விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, […]

உக்ரைன் மீது 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் ..ஒருவர் பலி!

உக்ரைன் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 241வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், […]

உக்ரைன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய ரஷியா-மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு !

உக்ரைன் மீது ஒரே நாளில், 477 டிரோன்கள், 60 ஏவுகணைகள் மூலம் ரஷியா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் – ரஷியா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அண்மையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது 477 டிரோன்கள், 60 ஏவுகணைகள் மூலம் ரஷியா […]