நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை !

நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர்-செல்வி தம்பதியினரின் மகன் கவின். இவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த இளைஞர் நெல்லை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளி தோழியுடன் பழகி வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. […]

அருப்புக்கோட்டையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த கணவரால் பரபரப்பு !

குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா, ஜெயலெட்சுமி என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய […]