வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]

ஆன்லைன் விளையாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பதில் !

ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார் என்பதை ஏற்க முடியாது என, ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வர்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. […]