பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இருக்கும் என பிரதமர் மோடி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை மூட […]