திருவண்ணாமலையில் அரசு பேருந்தும் கரும் நேருக்கு நேர் மோதி 4 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதேசமயம் பாண்டிச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கைலாஷ், சதீஷ்குமார், சாருஷ் ஆகியோர் பெங்களூரில் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பாண்டிச்சேரி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, […]

“தமிழில் மட்டுமே பெயர் பலகை வைக்க வேண்டும்” – திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும். […]