புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணியை துவங்கியது தேர்தல் ஆணையம்!

ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். 74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. […]