இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் உள்ளனர் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம்!
புரட்சியாளர் அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில், விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த கிரேஸ் – இன் – வழக்குரைஞா் மையத்தில் புரட்சியாளர் அம்பேத்கா் 1922-ம் ஆண்டு பாரிஸ்டா் பட்டம் பெற்றார். அதை நினைவுகூறும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் […]
இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்று பாதிப்பு !
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கொரனோ பெருந்தொற்று சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் […]
பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்த ஆசிய வளர்ச்சி வங்கி -கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !
பாகிஸ்தானுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதியுதவி அளிப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும். இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி […]
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தல் !
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என, இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில், ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே, ஆபரேஷன் […]
அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டரின் விலை -மகிழ்ச்சியில் வணிகர்கள் !
கடந்த இரண்டு வருடங்களாக ஏறு முகத்தில் இருந்த சிலிண்டரின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும்சூழலுக்கு ஏற்ப மாறுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த […]
பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் – அமைச்சர் ஜெய்சங்கர்!
பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இருக்கும் என பிரதமர் மோடி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை மூட […]
இந்தியா – மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படை !
இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் . கெங்ஜாய் தெக்சிலில் உள்ள நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நடமாடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொட்டப்பட்டனர். இந்த நடவடிக்கை அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளையின் […]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி!
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் […]
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் …புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குசந்தை !
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்பட்டு வந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்றனர். இதனால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குகள் புதிய […]
பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் -வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]