தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

சுர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தால் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரபதி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. 176 ரன்கள் இலக்கை எளிதாக விரட்டிய இந்திய பந்துவீச்சு அணி, தென் ஆப்பிரிக்காவை 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு அழித்தது. இது இந்தியாவின் 2025ல் நடைபெற்ற டி20 போட்டிகளில் மிகப்பெரிய […]

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: மாநிலங்களுக்கு அதிகாரிகள் நியமன உத்தரவு – டிஜிட்டல் அடிப்படையிலான புதிய தொடக்கம்!

இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தீவிர ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. இந்திய பதிவாளர் ஜெனரல் (RGI) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஜனவரி 15, 2026க்குள் கணக்கெடுப்பு அதிகாரிகளை (enumerators) மற்றும் மேற்பார்வையாளர்களை (supervisors) நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இது 2027 கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடு-கணக்கெடுப்பு (house listing) பணியைச் சீரமைக்கும் நடவடிக்கையாகும். முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு, சாதிவாரி தரவுகளையும் சேர்த்து, நாட்டின் சமூக-பொருளாதார அடிப்படையை மறுவடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இந்தியா – இங்கிலாந்து மகளிர் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது !

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் […]

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் […]

இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு -பி.சி.சி.ஐ அறிவிப்பு !

அடுத்த மாதம் நடைபேற இருந்த இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஓத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடரில் ஆட இருந்தது. இந்த தொடர் ஆகஸ்ட்டு மாதம் 17ம் தேதி தொடங்க இருந்த நிலையில் வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரை திட்டமிட்ட படி நடத்த முடியாது என பி.சி.சி.ஐ., வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக […]

சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உருவாகியுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தை இந்தியாவின் ‘தங்க மகன்’ […]

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் – டொனால்ட் டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அணு ஆயுதப் போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 18வது முறையாகப் பேசியுள்ளார். கடந்த மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார். நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்றும் இரு […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அங்குள்ள லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 364 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.நான்காம் நாள் […]

இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றம் -பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் […]

இந்தியாவில் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !

தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏர் இந்தியாவின் AI – 143 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி […]