தருமபுரியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து !

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. […]