மழையில் நனைந்தபடியே படகு சவாரி – ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் !

கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், மழையில் நனைந்தபடியே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், சேர்வராயன் குகைக் கோயில், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா போன்ற இடங்களில் குடும்பத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை மழையால் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனிடையே, […]