ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி- திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு !

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய வழக்கில் கைதான ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண், திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் பிப்ரவரி 7ஆம் தேதி வழக்கம் போல தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் […]