நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தல் !

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என, இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில், ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே, ஆபரேஷன் […]