இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியம் – வீரமுத்துவேல் !

இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என, இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் – 3 திட்ட இயக்குனருமான டாக்டர் ப.வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது விண்வெளித்துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்றும் மாணவர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts