திருப்பத்தூர் | பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு !

பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தபேதர் முத்துசாமி தெருவைச் சேர்ந்த பாபு . இவரது மகன் ஆர்யா இவருக்கு வயது பன்னிரெண்டுஆர்யா, பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் ஆர்யா தனது சொந்த ஊரில் உள்ள தனது நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள செல்லா குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆர்யா, திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனை அறிந்த மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேகொண்டு வருகின்றனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts