தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை-பிரதமர் மோடி அறிவிப்பு !
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் வணக்கம் சோழநாடு’ எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என தெரிவித்தார் .
மேலும்,சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது என்றும், சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள் என்றும், சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், தமிழகத்தில் ராஜராஜன் சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

