15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வரும் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும் என்றும் இந்த முகாம்களில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 15-ந் தேதி தொடங்கி, தமிழ்நாடு நடத்தப்படும் முகாம்களில் நகர பகுதிகளில் 13 அரசு துறைகளின் 43 சேவைகளையும், கிராமப் பகுதிகளில் 14 அரசு துறைகளின் 46 சேவைகளையும் மக்கள் பெறலாம் என்றும், ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெறும் முகாம்களில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? போன்ர தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் தன்னார்வலர்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts