நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு !

நியூயார்க் நகரில் கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நெடுஞ்சாலைகள் மற்றும், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.

அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ள நீர் புகுந்தத்தால், பயணிகள் இருக்கையில் ஏறி நின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts