உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் -17 பேர் உயிரிழப்பு !

உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று ஆயிரத்து 252வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி தோல்வியடைந்தது.
அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் டிரோன்கள் மூலம் சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 17 பேர் உயிரிழந்த நிலையில் மேலும், 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்