உக்ரைன் மீது 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் ..ஒருவர் பலி!

உக்ரைன் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 241வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணம் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி இன்று அதிகாலை ரஷியா தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். அதேவேளை, பெரும்பாலான ஏவுகணைகள், டிரோன்கள் உக்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts