பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை !

பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் ராமேசுவரம் உள்பட கடற்கரை பகுதி மீனவர்கள் கட லில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், மீனவர்கள் பலர் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகி பலியாகியும் வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேவை கடந்த 2 ம்தேதி கச்சத்தீவைக் கைப்பற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. மீன்னவர்களின் வாழ்க்கையும் பாதுகாப்பும் உறுதி செய்ய மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

தற்போது,நிலவும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த தீர்மானத்தின் நோக்கமாகும். கச்சத்தீவு தாமதமின்றி மீட்டெடுக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப் பட வேண்டும்.

இலங்கைக் சுற்றுப்பயணத்தின் போது கச்சத்தீவை மீட்ப தற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய காந்த் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இலங்கை செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடலில் மீன் பிடிக்கும் வகையிலும்,கச்சத் தீவை மீட்ப தற்கான வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவை முழுமையாக இந்தியாவுடன் இணைப்பதுடன்
மீன்னவர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும்.

மேலும், இந்தியாவை முழுமையான வல்லரசு நாடாக மாற்றுவேன் என செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் பி. ஜே.அப்துல் கலாம் கனவை நனவாக்கும் வகையிலும், அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் ரயில்வே பாலம் வரும் 6 ம்தேதி திறக்கப்படவுள்ளது.

பாலம் திறப்புவிழாவிற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன்ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டுமென தே.மு.தி.க. பொதுச் செயலாள பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இக் கோரிக்கையினை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றும் வகையில் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டு என கேட்டுக்கொள்கிறோம்” அறிக்கையில் தெரிவித்துள்ளார்.