தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ரமலான் வாழ்த்து !

ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமை,அந்த கடமையை செய்துவரும் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,”உலகத்தில் ஏழ்மை என்பது என்னவென்று அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். மேலும், நோன்பு இருப்பதன் மூலம் உடல் நலனும் பேணப்படுகிறது. இவ்வாறு, பல வகையிலும் மனிதர்களை மேம்படுத்தும் வகையில் இந்த ரமலான் நோன்பு அமைந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இஸ்லாம் மார்க்கத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் அவர்களிடையே வேற்றுமை இல்லாமல் ஒன்றாகுப் பழகும் தன்மை இருந்து வருகிறது. இந்த வகுப்பு ஒற்றுமையை கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

“இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற குறிக்கோளோடு இயங்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கும் சம வாய்ப்பும், முன்னேற்றமும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் உள்ளது.
சர்வ மதத்தவரும் ஒவ்வொரு மதத்தினருடைய சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில் ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற அனைத்து பண்டிகைகளிலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறோம்.
இந்த இனிய நன்னாளில் மக்கள் தங்களிடையே உள்ள வேற்றுமையை போக்கி, ஒற்றுமையை வளர்த்து, மனிதநேயம் மலரவும், நாடு வளம் பெறவும், அனைவரும் முன்னேற வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தோடு இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த அனைத்து பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், சகோதரர்களுக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.
மேலும், “ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் திரு. APJ அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும்” என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.