பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் நாளைக்கு ஏவப்பட்ட உள்ளது -இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், பூமியில் உள்ள சிறிய பொருளையும் துல்லியமாக காட்டும் தன்மை கொண்டது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது 101வது ராக்கெட்டான PSLV-C61-ஐ நாளை, ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்படவுள்ளது.

காலை 5:59 மணிக்கு ஏவப்பட உள்ள இந்த ஆர்ஐஎஸ்ஏடி-1பி என்ற செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருட்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என கூறப்படுகிறது.

இதனிடையே, திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், நாசாவும் இந்தியாவும் இணைந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை உருவாக்கி ஏவ உள்ளதாகவும் வணிக ரீதியான அமெரிக்க செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவ உள்ளதாகவும் கூறினார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts