பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு !

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.தனக்கு தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனுப்பும் கடிதங்களில் அவர்களின் கையெழுத்தும் ஆங்கிலத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள் எனப் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழியில் மருத்துவ பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் மருத்துவ படிப்புகளை தொடங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளது.

வழக்கமாக எனக்கு தமிழ்நாட்டில் இருந்து சில தலைவர்கள் கடிதங்கள் எழுதியுள்ளனர். அந்த கடிதங்களில் எனக்கு மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்ன வென்றால் கடிதம் என்னவோ ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆனால், கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம் கையெழுத்தையாவது தமிழில் போடக்கூடாதா என நான் நினைப்பது உண்டு.

21 ஆம் நூற்றாண்டில் நாம் இந்த மகத்தான பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது உறுதியான கருத்து. இந்த மண் தொடர்ந்து புதிய சக்தியை, உள் எழுச்சியை அளித்துவரும் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை.” எனப் பிரதமர் மோடி.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts