உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை இன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி !

காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து திறந்துவைத்துள்ளார்.
காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார். அதோடு, உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்துள்ளார்.
சுமார் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ள பிரதமா் மோடி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா் செல்ல உள்ளதாக இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமரின் காஷ்மீர் பயணத்தையொட்டி, ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, உளவுத் துறை ஆகியவை அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.