பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் விருது வழங்கி கவுரவிப்பு !

பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற அவர், தலைநகர் நிகோசியாவ்வுக்குச் சென்றடைந்தார்.
அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் பிரதமர் மோடியை வரவேற்றார். அதைத் தொடர்ந்து லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்சும் பங்கேற்றனர்.
இந்த நிலையில், சைப்ரஸின் மிக உயர்ந்த விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ்-3’ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கவுரவித்தார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாகப் பேசினார்.