உலக பூமி தினத்தை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை !

உலக பூமி தினம் (ஏப்ரல் 22 ) முன்னிட்டு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ”இன்று உலக பூமி தினம். இந்த பூமி நம் அனைவரையும் தாங்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனை கோடி மக்களின் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.

இன்றைக்கு நாம் காணும் நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிப்பது, குளங்களில் சாக்கடை நீர் கலப்பது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன நீர் போன்றவை இந்த பூமியின் அமைதிக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலைமைகளை மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.”என் பூமி, என் வீடு” என்ற மனப்பான்மையுடன், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டு, நமது பூமாதேவியை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.
இயற்கையை அழிக்காமல், பாதுகாத்து, பசுமை பூமியாக மாற்றி, அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.