கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தை போப் பிரான்சிஸ் காலமானார் !

கத்தோலிக்க திருச்சபை தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்.இவர் கடந்த மாதம் 14 அம் தேதி, உடல்நலக்குறைவால் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வீடு திரும்பினாா்.

அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்களின் அறிவுறுத்தாளின் பேரில் அவர் ஓய்வில் இருந்தார.

இந்நிலையில், நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் பிரான்சிஸ் ஆலயத்திற்கு வருகை தந்து மக்களுக்கு போதனை அளித்தார். இதனையடுத்து இன்று காலை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க போப் பிரான்சிஸ் காலமானார்.

போப் பிரான்சிஸ் மறைவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts