அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் !

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்தவிபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,இத்துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் “அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனம் நொறுகியது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அங்கு பணியாற்றும் அமைச்சர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.