நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு !

ஜூலை 21ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள் மட்டும் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது எனவும் கிரண் ரிஜிஜூ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் மீது காரசாரமான விவாதங்கள் நடைபெறூம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts