சில மணிநேரத்திலே பழுதான பாம்பன் ரயில் பாலம் !

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சில மணி நேரத்திலேயே பழுதானது பேசுபொருளாகியுள்ளது.
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நேற்று 544 கோடி மதிப்பீட்டில் 2.08 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் ஹைட்ராலிக் முறையில் இயங்குகிறது.
இந்தப் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல் செல்லும்போது, செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு பாலம் தூக்கப்படுகிறது.
இந்நிலையில், செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் பழுதாகி தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனிடையெ, பிரதமர் மோடி திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பாலம் பழுதடைந்ததால் எதிர்க் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.