மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் – பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு !

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து,அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் நேற்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த அறிவிப்பை தேமுதிக சார்பாக நான் வரவேற்கிறேன் மனதாரப் பாராட்டுகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts