சட்டமன்ற கூட்டத் தொடரில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த மராட்டிய அமைச்சர் மாணிக் ராவ் !

மராட்டியத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரில் அம்மாநில வேளாண் துறை அமைச்சராக உள்ள மாணிக் ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது.
உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும் உள்ளது. அதில் அஜித் பவார் அணியை சேர்ந்த மாணிக் ராவ் கோகடே மராட்டிய வேளாண் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்த்து வருகின்றார்.
இந்தநிலையில் சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்.
சட்டப்சபையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், அவர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே எம்.பி. வலியுறுத்தியுள்ளார் .