குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .

ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் 23 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 21 ரன்களிலும், சுப்மன் கில் 35 ரன்களிலும், ஜாஸ் பட்லர் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக விளையாடிய ஷாருக் கான் 57 ரன்களில் வெளியேறினார். இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts