ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அதிரடி வெற்றி !

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய லக்னோ, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் பதோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய அப்துல் சமத் 10 பந்தில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரானா 8 ரன்களில் வெளியேறினார். ரியான் பராக் 39 ரன்களிலும் ஹெட்மயர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts