வெடித்துச் சிதறிய இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி எரிமலை – அதிர்ச்சியில் மக்கள் !

இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி எரிமலை வெடித்துச் சிதறி வருவதால் சுற்றியுள்ள மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அதன்படி நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவில் லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை அமைந்துள்ளது.

இந்த எரிமலை நேற்று தொடர்ந்து 3 முறை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தன. இதனால் ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதோடு, எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஆறாக பாய்ந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts