கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் 29 பந்தில் 60 ரன்களும், ரகுவன்ஷி 32 பந்தில் 50 ரன்களும் குவித்தனர். ரகானே 38 ரன்களும், ரிங்கு சிங் 32 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசன் 33 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில், ஐதராபாத் அணி 16.4 ஓவரில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts