கொச்சியில் நடைபெற்ற சரக்குக் கப்பல் விபத்து பேரிடராக அறிவிப்பு -கேரள அரசு!

கொச்சி அருகே, சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது.
லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று கடந்த 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்தபோது கடலில் மூழ்கத் தொடங்கியது.
தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே, கப்பலில் ஏற்றிவந்த 367 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் கடலில் கலக்கத் தொடங்கியது.
இது மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்டெய்னர்களைக் கண்டால் கடலோரக் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கண்டெய்னர்களில் இருந்து ரசாயனப் பொருட்கள் கடலில் கலக்கத் தொடங்கியுள்ளதால் கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
கப்பலில் வெடிக்கக் கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.