சென்னையில் அரசு பேருந்து மோதி ஐ.டி ஊழியர் உயிரிழப்பு !

தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் ஐ.டி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐ.டி ஊழியரான மதியழகன். இவர், கூடுவாஞ்சேரியில் தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில்,நேற்று இரவு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிகனல் அருகே தனது பைக்கில் மதியழகன் சென்று கொண்டிருந்த போது தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகன் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.