மீண்டும் ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி தொடங்கும் -இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துள்ளன.
இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது. இதனால் ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி, 17 ஆம் தேதி மற்ற போட்டிகள், தொடங்கும் என்றும் ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும்